Tamil Sanjikai

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு விவகாரத்தின் எதிரொலியாக, இந்தியாவுக்கான பேருந்து சேவையை பாகிஸ்தான் அதிரடியாக திடீரென நிறுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக பாகிஸ்தானின் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் முராத் சயீத் இன்று அறிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சம்ஜவுதா எக்ஸ்பிரஸ்(Samjhauta Express services) ரயில் சேவையையும் ரத்து செய்யப்படுவதாகவும், இந்திய திரைப்படங்களை பாகிஸ்தானில் வெளியிட தடை விதிக்கப்படுவதாகவும் பாகிஸ்தான் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment