Tamil Sanjikai

மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வீசும் காற்றால், ஆண்டிப்பட்டி, கண்டமனூர், கடமலைக்குண்டு, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சுமார் 500 காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. ஒரு காற்றாலை மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 12 ஆயிரத்தில் இருந்து 13 ஆயிரம் யூனிட் வரையிலான மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

கோடை காலம் மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக லோயர்கேம்பில் உள்ள பெரியாறு நீர் மின் உற்பத்தி நிலையம், சுருளியாறு மின் உற்பத்தி நிலையம், முல்லையாற்றில் அமைக்கப்பட்டுள்ள மைக்ரோ மின் உற்பத்தி நிலையங்களில் தற்போது மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தும் வகையில், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணியில் மின்சாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

0 Comments

Write A Comment