Tamil Sanjikai

சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஆயிரம் ரன்களையும் 100 விக்கெட்டுகளையும் எடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எலீஸ் பெர்ரி புதிய சாதனைப் படைத்துள்ளார்.

கடந்தாண்டு நடைபெற்ற பெண்கள் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் நாட் ஸ்கிவெரின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய வீராங்கனை எலீஸ் பெர்ரி எடுத்தார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்தில் நடந்து வரும் ஆஷஸ் 20 ஓவர் தொடரில் 2-வது போட்டி
நேற்று நடைபெற்றது. அதில் 39 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவின் எலீஸ் பெர்ரி சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 1000 ரன்களை கடந்துள்ளார்.

இதன் மூலம் சர்வதேச ஆண்கள் மற்றும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்டில் முதல் முறையாக 1000 ரன்களுடனும் 100 விக்கெட்டுகளையும் எடுத்தவர் என்ற புதிய சாதனையை எலீஸ் பெர்ரி படைத்துள்ளார்.

தற்போது விளையாடி கொண்டிருக்கும் வீரர்களில் இவரது சாதனைக்கு மிக அருகில் வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹசன் 88 விக்கெட்டுகள் மற்றும் ஆயிரத்து 471 ரன்களுடன் இருக்கிறார்.

0 Comments

Write A Comment