Tamil Sanjikai

சிறுவர்களை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் ஆபாச செய்திகளை பரப்பினால் ஜாமீனில் வெளிவர முடியாததுடன் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் வருகிறது. தற்போதுள்ள போக்சோ சட்டத்தின் 15ஆவது பிரிவின்படி, இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும். திருத்தம் செய்யப்பட்ட பிறகு 3 ஆண்டுகளுக்கு குறையாமலும் 5 ஆண்டுகள் வரை சிறையும் கடும் அபராதமும் விதிக்கப்படும்.

ஜாமினில் வெளிவர முடியாத குற்றமாகக் கருதப்படும் இதே தவறை இரண்டாவது முறையாக செய்தால், 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் வாட்ஸ்அப்பில் சிறுவர்களை ஆபாசமாக சித்தரிக்கும் கன்டன்ட்டுகள் வந்தால் அதை அழித்துவிடவோ புகார் அளிக்கவோ தவறினால் அபராதம் விதிக்கப்படும்.

போக்சோ சட்டத்தின் 15-ஆவது பிரிவில் செய்யப்பட உள்ள இந்த திருத்தங்கள் சட்ட அமைச்சகம், குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சகங்களின் ஒப்புதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அடுத்த வாரத்தில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments

Write A Comment