Tamil Sanjikai

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த மைக்கேல் பாளையம்; ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது சமத்துவபுரம். இங்கு 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சமத்துவபுரம் உருவாக்கப்பட்ட ஆரம்பகாலத்தில் தொழிற்கூடம், சமுதாயக் கூடம் சிறுவர் விளையாட்டு திடல், நூலகம், ரேஷன் கடை, ஆழ்குழாய் கிணற்றுடன் கூடிய மோட்டார் அறை, சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி உள்ளிட்ட வசதிகள் மக்கள் பயன்பாட்டிற்கு இருந்து வந்தது.

ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக சரியான பராமரிப்பு பணிகள் மேட்கொள்ளப்படாததால் முட்புதர்கள் முளைத்து காடு போல் உள்ளதாகவும், தண்ணீருக்காக பல மைல் தூரம் நடக்க வேண்டியுள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் முறையிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டிய அப்பகுதி மக்கள், இது குறித்து ஒரு வார காலத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்துவதோடு மட்டுமல்லாமல் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.

0 Comments

Write A Comment