போர் விமானங்களில் இருந்து தரையை நோக்கி வீசி, பிரமாண்ட கட்டடங்களை குறிவைத்து தாக்கி அழிக்கும், அதிநவீன வெடிகுண்டை, இந்திய விமானப்படை இஸ்ரேல் நாட்டிடமிருந்து வாங்கவுள்ளது.
ஸ்பைஸ் 2000 எனப்படும் அதிநவீன சக்தி வாய்ந்த இந்த வெடிகுண்டு, ஆகாயத்திலிருந்து தரையை நோக்கி இலக்கை தாக்கி அழிக்கும் வகையை சேர்ந்தது. 300 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தின் படி இஸ்ரேலிடமிருந்து, அடுத்த மாதம் இந்திய விமானப்படைக்கு இந்த வெடிகுண்டு வழங்கப்படவுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் என்ற தகவல் வேகமாக பரவி வரும் நிலையில், விமானப்படையின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானை ஆட்டம் காண வைக்கும் என நம்பப்படுகிறது. இதற்கு எதிர்வினையாக அந்த நாடும் சீனாவிடமிருந்து ஏதேனும் ஆயுதத்தை வாங்க முனைப்பு கட்டலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments