Tamil Sanjikai

இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ள குருத்வாராவுக்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் சென்று வர கர்தார்பூர் வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த நடைபாதையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, நவம்பர் மாதம் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி எஸ்.எம்.குரேஷி கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அழைப்பு விடுத்திருந்தார். தொடக்க விழாவிற்கு இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அழைக்க விரும்புகிறோம். அவர் சீக்கிய சமூகத்தின் பிரதிநிதியாக உள்ளார். நாங்கள் அவருக்கு முறையான அழைப்பிதழை அனுப்பி உள்ளோம்" எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால் பாகிஸ்தான் அரசு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பவில்லை. ஆனால் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை அழைத்துள்ளது. ஆனால் பாகிஸ்தானின் அழைப்பை அவர் நிராகரித்து விட்டார்.

இந்த நிலையிலி நவம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ள தொடக்க விழாவில் மன்மோகன் சிங் கலந்துக்கொள்கிறார். ஆனால் பாகிஸ்தானின் அழைப்பு ஏற்று அல்ல. பஞ்சாப் முதல்வரின் அழைப்பின் பேரில் செல்கிறார்.

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் இன்று (வியாழக்கிழமை) மன்மோகன் சிங்கை சந்தித்து கர்தார்பூர் நடைபாதையின் துவக்க விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நவம்பர் 9 ஆம் தேதி முதல் நடைபெறும் தொடக்க விழாவிற்கு கேப்டன் அமரீந்தருடன் கர்தார்பூருக்குச் செல்கிறார்.

0 Comments

Write A Comment