Tamil Sanjikai

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில், இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதவிருந்த நிலையில், தொடர் மழையின் காரணமாக, ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையே பலப்பரீட்சை நடப்பதாக இருந்தது. எனினும், போட்டி நடைபெறவிருந்த மைதானத்தில் இன்று மாலை வரை மழை பெய்ததால், போட்டி துவங்குவதில் தாமதம் ஆனது.

இதனால், 50 ஓவர்கள் கொண்ட போட்டி, 20 ஓவர்களாக குறைக்கப்பட்டு, இரவு 8:49 மணிக்கு துவங்குவதாக இருந்தது. எனினும், மைதானத்தில் ஈரம் காயாததால், இன்றைய போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இதனால், இரு அணி ஆதரவாளர்கள், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

0 Comments

Write A Comment