நடிகர் விஷாலுடன் பள்ளி சிறுமியை இணைத்து, ஆபாசமாக சமூக வலைதளத்தில் பதிவு செய்து தலைமறைவான, பெண்ணை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் பெண் ஒருவருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக, அவரது பள்ளி செல்லும் மகளை நடிகர் விஷாலுடன் தொடர்புபடுத்தி, ஆபாசமான படங்களையும், அவதூறு கருத்துக்களையும் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து சிறுமியின் தாயார் ராயப்பேட்டை மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகாரளித்தார். இதையடுத்து இந்தத் வழக்கு மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலிசாருக்கு மாற்றப்பட்டது.
சைபர் கிரைம் போலீசார் விஸ்வ தர்ஷினி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர். இதையறிந்த விஸ்வ தர்ஷினி தலைமறைவானார்.
இந்த நிலையில் விஸ்வ தர்ஷினி திருச்சங்கோட்டில் இருப்பதாக வந்த தகவலையடுத்து சென்னை சைபர் கிரைம் போலிசார் அங்கு சென்று அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
சென்னை அழைத்துவரப்பட்ட அவர், காலை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையிலடைக்கப்பட்டார்.
0 Comments