Tamil Sanjikai

சென்னையில் சிறுமிகள் மூவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை எழும்பூராய் சேர்ந்தவர் விஜய். இவர் சிறுமிகள் மூவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், விஜய் மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து, தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் விஜய் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவனுக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனையும், 21 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

0 Comments

Write A Comment