பன்றி இறைச்சியை கடத்தியதாக சவுதி அரேபிய இளவரசர் அடெல் அல் குதாய்பியை இஸ்ரேல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இஸ்ரேல் நாட்டில் பன்றி வளர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பன்றி இறைச்சி தொடர்பான உணவுப் பொருட்களை கடத்த முயன்றதாக சவுதி அரேபிய இளவரசர் அடெல் அல் குதாய்பியை இஸ்ரேல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கன்றுக்குட்டி இறைச்சி என்ற பெயரில் 2 ஆயிரம் கிலோ பன்றி இறைச்சியை அவர் இஸ்ரேல் நாட்டிற்கு கடத்தி வந்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது. இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சர் அடெல் அல் ஜீபையர் கூறுகையில், அரச குடும்பத்தினர் மீது இஸ்ரேல் வீண் பழி சுமத்தியுள்ளது. உடனடியாக இளவரசர் அடெல் அல் குதாய்பி மற்றும் அவரது பாதுகாவலர்கள் 17 பேரை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
0 Comments