Tamil Sanjikai

விருதுநகர் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் நடவடிக்கை எதுவும் எடுத்ததால் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர் காவல்நிலையம் புகுந்து தாக்குதல் நடத்தியதில் ஆய்வாளரின் தலையில் படுகாயம் ஏற்பட்டது.

மல்லாங்கிணறு பகுதியிலுள்ள காளியம்மன் கோவிலை உரிமை கொண்டாடுவது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.இதனைத் தடுக்க வந்த போலீசார் சிலரை கைது செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கைதானவர்களின் உறவினர்கள் காவல்நிலையத்துக்குள் புகுந்து கல்வீசித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் ஆய்வாளர் அன்னராஜின் தலையில் படுகாயம் ஏற்பட்டது.

உடனிருந்த 2 காவலர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

0 Comments

Write A Comment