Tamil Sanjikai

தருமபுரியில் அருகே பல்லாபுரம் என்ற இடத்தில் சாலையில் சென்ற 2 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த திருமூர்த்தி என்பவரின் மனைவி லதா என்ற பெண் பலியானார். இவர் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த விபத்தில் திருமூர்த்தி மற்றும் அவரது மகன் அபிநவ் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இதேபோன்று மற்றொருவரும் உயிரிழந்துள்ளார்.

இதனால் இந்த விபத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 4 பேர் பலியாகி உள்ளனர். காயமடைந்த மற்ற 6 பேர் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

Write A Comment