Tamil Sanjikai

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாய்னா நேவால் 22-20, 15-21, 10-21 என்ற செட் கணக்கில் போராடி தாய்லாந்து வீராங்கனை போர்பவீ சோச்சுவாங்கிடம் தோல்வியடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து 22-20, 21-12 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பான் நாடு வீராங்கனையான அயா ஓஹோரியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் (இந்தியா) 21-18, 21-16 என்ற நேர் செட்டில் இந்தோனேஷியா வீரர் மாவ்லனா முஸ்தோபாவை வென்றார். அதே சமயம் இந்தியாவின் பிரனாய் 21-12, 16-21, 14-21 என்ற செட் கணக்கில் சித்திகோம் தமாசினிடம் (தாய்லாந்து) தோற்று வெளியேறினார்.

0 Comments

Write A Comment