Tamil Sanjikai

திருவாரூர் இடைத்தேர்தலில் தி.மு.க கட்சியின் சார்பில் போட்டியிட போகும் வேட்பாளர் டி.ஆர்.பாலுவா என்பது குறித்து வரும் வெள்ளிகிழமை மாலை தெரியவரும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. சட்டமன்ற கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை, மேகதாது விவகாரம் மற்றும் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் உண்மை நிலவரம் குறித்து தான் ராகுல் காந்தி பேசியுள்ளதாக தெரிவித்தார். மேலும் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவித்து இருப்பதில் மத்திய, மாநில அரசுகளின் சூழ்ச்சி உள்ளது என்றும் கூறினார்.

0 Comments

Write A Comment