Tamil Sanjikai

முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு தமது சொந்த செலவில் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஓ.பன்னீர்செல்வம், மாநில அளவிலும், தேனி மாவட்டத்திலும் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

மாணவர்களிடையே ஏற்படும் மதிப்பெண் அடிப்படையிலான வேறுபாடுகளை போக்கும் நோக்கில் பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் போது முதல், இரண்டாம், மூன்றாம் இடங்கள் அறிவிக்கப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு பதக்கம் வழங்கப்படும் என துணை முதல்வரின் கூறியிருப்பது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இது பற்றி விளக்கமளித்த துணை முதல்வர், தமது சொந்த செலவில் தங்கப்பதக்கம் வழங்க உள்ளதாகக் கூறினார்.

0 Comments

Write A Comment