Tamil Sanjikai

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாட இலங்கை அணி வீரர்கள் 10 பேர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இலங்கை அணி, செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 9 ஆம் தேதி வரை பாகிஸ்தானில் 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட ஐ.சி.சி முடிவுசெய்ந்திருந்தது. இந்த நிலையில், பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணியில் இருந்து பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காடி 10 வீரர்கள் விலகியுள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியபோது, லாகூரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், இலங்கை வீரர்கள் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Write A Comment