Tamil Sanjikai

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உட்பட, உலக கோப்பை கிரிக்கெட் அணியில் விளையாடும் 10 அணிகளின் கேப்டன்களுக்கும், இங்கிலாந்து ராணி எலிசபெத் பக்கிங்காம் அரண்மனையில் விருந்தளித்து கௌரவித்தார்.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் துவக்க விழா, லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனை வளாகத்தில் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்களும் நடுநாயகர்களாய் வீற்றிருக்க, வண்ணமயமான இவ்விழா நடந்தேறியது.

விழாவிற்கு பின்னர், பக்கிங்காம் அரண்மனை தோட்டத்தில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் கேட்பன் விராட் கோலி, இங்கிலாந்து அணி கேப்டன் இயோன் மார்கன் உள்ளிட்ட 10 அணிகளின் கேப்டன்களும் இநத் விருந்தில் பங்கேற்றனர்.

0 Comments

Write A Comment