வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது தென்மேற்குப் பருவக்காற்றை வலுப்பெறச் செய்யும். இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது..
காற்றில் இருந்த ஈரப்பதத்தை வாயு புயல் எடுத்துச் சென்றதால், தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக தீவிரமாகாத நிலையில், வங்க கடலில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, பருவக்காற்றை வலுப்பெற செய்யும்.
இதனால் இன்னும் சில தினங்களில் தமிழகத்திலும், கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
0 Comments