Tamil Sanjikai

தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை வரும் 8-ஆம் தேதி பேரவைத் தலைவர் கூட்டியுள்ளதாகவும், அன்று காலை 10 மணிக்கு 2019 - 2020-ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் நிதிப் பொறுப்பை கவனித்து வரும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment