Tamil Sanjikai

கர்நாடக மாநிலத்தின் குடகு உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் பல இடங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்குகிறது.

குறிப்பாக உடுப்பி மற்றும் குடகு மாவட்டங்களின் நிர்வாகங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கேரள மாநிலம் கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

0 Comments

Write A Comment