Tamil Sanjikai

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுத்தால் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்,

சபாநாயகர் தனபாலிடம் அரசு கொறடா புகார் அளித்துள்ள நிலையில், பாரபட்சமற்ற முறையில் பேரவைத் தலைவரின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அரசியல் சட்டத்திற்கு புறம்பாக சபாநாயகர் செயல்படக் கூடாது. அவ்வாறு சபாநாயகர் நடுநிலைமை தவறி நடவடிக்கை எடுத்தால், பேரவை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

0 Comments

Write A Comment