Tamil Sanjikai

ஈரான் கச்சா எண்ணையை குறைக்க இந்தியா திட்டம்.

கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பு நிதியாண்டில் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவை 35 சதவீதம் வரை குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதனால் பொருளாதாரத் தடை விதிப்பில் இருந்து அமெரிக்க நாடானது இந்தியாவுக்கு விலக்கு அளிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில நாட்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த நிதியாண்டில் 22 மில்லியன் டன் கச்சா எண்ணெயை ஈரானில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது. நடப்பு நிதியாண்டில் இந்த அளவை 30 மில்லியன் டன்னாக அதிகரிக்க இந்தியா முடிவெடுத்திருந்தது.

இந்நிலையில், ஈரான் மற்றும் அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதும் வரும் 4-ம் தேதி முதல் பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. அதிலிருந்து விலக்கு பெறும் வகையில், இந்தியா தரப்பில் அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் கடந்த சில மாதங்களாகவே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்தியாவிற்கு விலக்கு அளிப்பதற்கான சில நிபந்தனைகளை அமெரிக்கா விதித்தது. அதைத்தொடர்ந்து ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் அளவை இந்தியா 14 முதல் 15 டன்களாக குறைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 Comments

Write A Comment