ஆன்லைன் மருந்து விற்பனைக்கான சரியான விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் மருந்து விற்பனைக்கு சில நாட்களுக்கு முன்பு விதித்த தடை உத்தரவை நிறுத்திவைத்துச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை விதிக்க கோரித் தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்தும் விதிகளை ஜனவரி 31க்குள் அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.
ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை விதித்தும் உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு ஆன்லைன் மருந்து வணிக நிறுவனங்கள் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்குகள் நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இரு பிரிவின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை விதித்து பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.
0 Comments