Tamil Sanjikai

துபாயில் நிகழ்ந்த சாலை விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர் , அதில் 7 பேர் இந்தியர் என தகவல் வெளியாகியுள்ளது.

மஸ்கட்டில் இருந்து துபாய் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்றில் வெளிநாட்டவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் சென்றுகொண்டிருந்தனர். துபாய் அருகே பேருந்து வந்தபோது, பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமைடைந்த 5 பேர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில், ராஜகோபாலன், தீபக்குமார், வாசுதேவன் உட்பட 7 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

0 Comments

Write A Comment