இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவரான மிதாலி ராஜ், சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36-வயதான மிதாலி ராஜ் 32 இருபது ஓவர் போட்டிகளில் கேப்டனாக விளையாடியுள்ளார்.
ஓய்வு குறித்து மிதாலி ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2006 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறேன். 2021 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில், நான் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற முடிவு செய்துள்ளேன்.
எனது நாட்டுக்காக உலகக்கோப்பையை பெற்று கொடுக்க வேண்டும் என்பது எனவு கனவாகும். இந்த கனவை நிறைவேற்ற என்னால் இயன்ற அளவு கடுமையாக விளையாடுவேன்” என்று தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை அடித்த முதல் இந்தியராக மிதாலி ராஜ் உள்ளார். மேலும் ஒரு நாள் போட்டிகளில் 6000 ரன்கள் கடந்த ஒரே பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை என்ற சிறப்பும், 200 போட்டிகளுக்கு மேல் விளையாடிய ஒரே பெண் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையும் மித்தாலிக்கு உண்டு.
0 Comments