Tamil Sanjikai

ஊக்க மருந்து உட்கொண்ட காரணத்தால் இந்திய தடகள வீராங்கனை, நிர்மலா ஷியோரனுக்கு 4 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு போட்டியில் நிர்மலா ஷியோரன் ஊக்கமருந்து உட்கொண்டார் என்று சோதனையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, 2018ஆம் ஆண்டு ஜூன் 29 முதல் 4 ஆண்டுகளுக்கு விளையாட தடை விதிக்கப்பட்டு, வீராங்கனை நிர்மலா ஷியோரன் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற 2 பட்டங்களும் பறிக்கப்பட்டது.

0 Comments

Write A Comment