Tamil Sanjikai

புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகி சந்திரசேகர் என்பவர் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.

புதுச்சேரியை அடுத்த காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர காங்கிரஸ் நிர்வாகி ஜோசப். இவர், கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்ரவாளி சந்திரசேகர், வயது 54. கொலை வழக்கில் கைதாகியிருந்த இவர் , தற்போது ஜாமீனில் வெளியில் இருந்தார்.

இச்சூழலில் இன்று காலாப்பட்டு-மாத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்த சந்திரசேகர் மீது மர்ம நபர்கள், வெடிகுண்டு வீசியும் அதைத் தொடர்ந்து வெட்டியும் படுகொலை செய்தனர்.

0 Comments

Write A Comment