Tamil Sanjikai

வங்கிகளுக்கு தான் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படும் நிலையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தனது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, ஆனாலும் தான் 9 ஆயிரம் கோடி ரூபாயுடன் ஓடி விட்டதாக கூறுவது எந்த விதத்தில் நியாயம் என விஜய் மல்லையா தனது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தான் ஒவ்வொரு நாளும் காலையில் எழும்போது புதிதாக தனது மற்றுமொரு சொத்தை பறிமுதல் செய்யக் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக தினமும் கடன் மீட்புத் தீர்ப்பாய அலுவலரைச் சந்திக்க வேண்டியிருப்பதாக மல்லையா கூறியுள்ளார். தற்போது அதன் மதிப்பு 13 ஆயிரம் கோடி ரூபாயை கடந்துள்ளதாகக் கூறியுள்ள அவர், தான் வட்டியுடன் 9 ஆயிரம் கோடி ரூபாய் தரவேண்டும் என வங்கிகள் கூறும் நிலையில் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் கையகப்படுத்தப்படுவது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

0 Comments

Write A Comment