Tamil Sanjikai

அமெரிக்க நாட்டின் துணை அதிபர் மைக் பென்ஸ் அடுத்த வாரத்தில் நான்கு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது அமெரிக்கா- ஆசியன் உச்சி மாநாடு, சிங்கப்பூரில் நடைபெறும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்கிறார். வழக்கமாக இந்த மாநாடுகளில் அமெரிக்க அதிபர் கலந்து கொள்வதுதான் வழக்கம். ஆனால் இந்த ஆண்டு , அதிபர் டொனால்டு டிரம்ப் கோரிக்கையை ஏற்று துணை அதிபர் கலந்து கொள்ள உள்ளார்.

ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மற்றும் பபுவா நியூ கினியா ஆகிய நாடுகளில் நவம்பர் 11 முதல் 18-ம் தேதி வரை சுற்றுப்பயணம் செய்யும் மைக் பென்ஸ், அமெரிக்கா- ஆசியன் உச்சி மாநாடு, சிங்கப்பூரில் நடைபெறும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்கிறார். இந்த பயணத்தின் போது, ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, சிங்கப்பூர் பிரதமர் லீ ஹூசைன் லூங், பபுவா நியூ கினியா பிரதமர் பீட்டர் ஒ நெயில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மேரிசன் ஆகியோரை சந்திக்க உள்ளார்.

தனது சுற்றுப்பயணத்தின் போது, இந்திய பிரதமர் மோடியையும் மைக் பென்ஸ் சந்தித்து பேச இருக்கிறார் . இந்த சந்திப்பின் போது, இருநாட்டு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிகிறது.

0 Comments

Write A Comment