Tamil Sanjikai

முல்லைப் பெரியார் அணை நீர் தேக்கப்பகுதியில் கார் நிறுத்துவதற்காக கேரள அரசின் கட்டுமான பணி தீவிரமடைந்துள்ளதால், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமுளி அருகே உள்ள ஆனைவச்சால் பகுதியில் கடந்த 2014 ல் புதியதாக கார் பார்க்கிங் அமைக்கப்பட்டது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை மீறி, கேரள வனத்துறை அங்கு கட்டுமானப் பணிகள் செய்து வருவதைத் தடுத்து நிறுத்த கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளது.

இருந்த போதிலும், தேக்கடியில் கட்டுமானப் பணிகள் அதி தீவிரமாக நடந்து வருகிறது. அதனால், இதை அவசர வழக்காக எடுத்து விசாரணை செய்வதுடன், பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments

Write A Comment