நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சரியாக செயல்படவில்லை என்றால், அதற்கு கட்சியின் தலைவரே காரணம் என பாஜக தலைவர் அமித் ஷாவை, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
தேர்தலில் வெற்றி கிடைத்தால் கொண்டாடும் பலர், தோல்வி என்றால் காணாமல் போய்விடுவதாக, நிதின் கட்கரி கடந்த வாரத்தில் பேசியிருந்தார். அது பாஜகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், டெல்லியில் நடைபெற்ற புலனாய்வுப் பிரிவு கருத்தரங்கில் பேசிய அவர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பாக செயல்படாததே, சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம் என நிதின் கட்கரி கூறினார். தான் ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் பொது அந்த கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சரியாக செயல்படாவிட்டால் அதற்கு தாமே காரணம் என்ற அவர், இதன் மூலம் 5 மாநிலத் தேர்தல் தோல்விக்கு அமித் ஷாவே காரணம் என்றும் மறைமுகமாக குற்றஞ்சாட்டினார்.
0 Comments