Tamil Sanjikai

தமிழகத்தில் குட்கா, பான்மசாலா பொருட்கள் மீதான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

குட்கா, பான்மசாலா போன்ற பொருட்களை தடை செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் கடந்த 2016-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து, தமிழகத்தில் குட்கா, பான்மசாலா தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தலுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது.

கடந்த மாதம் 22-ஆம் தேதியுடன் இந்த தடை முடிவடைந்த நிலையில், குட்கா, பான்மசாலா பொருட்கள் மீதான தடையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

0 Comments

Write A Comment