Tamil Sanjikai

கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணல் லாரியுடன் டாஸ்மாக் மதுபானம் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் இரண்டு லாரிகளும் தீப்பிடித்து எரிந்தன.

இன்று அதிகாலை தொழுதூர் அருகே டாஸ்மாக் மதுபானங்களை ஏற்றிச் கொண்டு லாரி ஓன்று திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தது, அப்போது எதிரே வந்த மணல் லாரி கட்டுப்பாட்டை இழந்து டாஸ்மாக் லாரியின் டீசல் டேங்க் மீது வேகமாக மோதியது. இதனால் இரு லாரிகளும் தீப்பிடித்து எரிந்தன.தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடினர், ஆனால் சரக்கு லாரியில் இருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்புடைய மதுபானங்கள் முழுவதும் எரிந்து சாம்பலாகின.. இரண்டு லாரிகளும் முழுவதுமாக சேதம் அடைந்ததால் மொத்தம் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் இழப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.

மணல் லாரி ஓட்டுனர் படுகாயம் அடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு தீக்காயங்களுடன் கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒருமணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

0 Comments

Write A Comment