Tamil Sanjikai

சென்னை போரூர் அருகே ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கல், பெரிய கொளுத்துவான்சேரியை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகில் உள்ள சுடுகாட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

இதுதொடர்பாக மாங்காடு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வசந்தகுமாரை அழைத்து சென்ற அஜித்குமார் என்பவரிடம் விசாரணை நடத்தியதில் காட்டுப்பாக்கத்தை சேர்ந்த ஆனந்த், கார்த்திக், மணிமாறன் ராமாபுரத்தைச் சேர்ந்த சக்திவேல், பரத்குமார் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.  இதனை தொடர்ந்து 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தங்களின் நண்பரை வசந்தகுமார் கொலை செய்ததால் பழிக்குப்பழி வாங்க அவரை தீர்த்து கட்டியதாக தெரிவித்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய சக்திவேல், பரத்குமார் ஆகியோர் பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்  சரணடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதையடுத்து அனைவரையும் புழல் சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

0 Comments

Write A Comment