நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், 500 ரன்களை கடந்துள்ள முதல் வீரர் என்ற பெருமையை, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் பெற்றுள்ளார்.
லண்டன் லாட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் 22 -ஆவது ஓவரில் அவர் இந்த சாதனையை படைத்தார். இன்றைய ஆட்டத்தில் வார்னர் 53 ரன்கள் (61 பந்துகள்) எடுத்து அவுட் ஆனார்.
நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் செம ஃபாமில் இருக்கும் வார்னர், மொத்தம் ஆறே போட்டிகளில் 500 ரன்களை கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன், சச்சின் டெண்டுல்கர் (1996, 2003), மத்யூ ஹைடன் (2007), திலகரத்னே தில்சான் (2011), மார்டீன் குப்டீல் (2015) ஆகியோர் மட்டுமே ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 500 ரன்களை கடந்த வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.
0 Comments