Tamil Sanjikai

நிலவின் தென் துருவ பகுதியை இதுவரை எந்த நாடும் ஆராய்ந்தது இல்லை. அந்த வேலையை, செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான ஐ.எஸ்.ஆர்.ஓ ரூ.1,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியாவின் ‘சந்திரயான்-2’ விண்கலம்.

இந்த விண்கலத்தை ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் மூலம் கடந்த 15ந்தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ‘கவுண்ட்டவுனும்’ நடந்து வந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் ராக்கெட்டில் ஏற்பட்ட திடீர் கோளாறால் ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ஏவுவது நிறுத்தப்பட்டது.

தற்போது அந்த கோளாறை விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் சரி செய்து விட்டனர். இதையடுத்து இன்று ‘சந்திரயான்-2’ விண்கலத்துடன், ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்தது.

இதுபற்றி இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சந்திரயான்-2 விண்கலத்தில் உள்ள தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. இனிமேல் தொழில்நுட்ப கோளாறு நடப்பதற்கான சாத்தியமே இல்லை என கூறியுள்ளார்.

சந்திரயான்-1 நீர் மூலக்கூறு இருப்பதை கண்டறிந்தது போல் சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படுவதை உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன என்றும் கூறினார். இந்நிலையில், கிரையோஜெனிக் ஸ்டேஜ் (சி25)ல், திரவ ஆக்சிஜன் நிரப்பப்பட்டது. இதன்பின் திரவ ஹைட்ரஜன் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மதியம் 2:43 மணிக்கு திட்டமிட்டபடி சந்திரயான்-2 ஏவுகணை வெற்றிகரமுடன் விண்ணில் இன்று ஏவப்பட்டுள்ளது.

0 Comments

Write A Comment