உடல்நல குறைவால் மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த், நாளை மறுநாள் நாடு திரும்புவதாக அக்கட்சி தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 18ஆம் தேதி மேல்சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா சென்றார். கிட்டத்தட்ட இரண்டு மாதகாலமாக அங்கேயே தங்கியிருந்து சிகிச்சைபெற்றுவருகிறார்.இந்நிலையில் மேல்சிகிச்சை முடிந்து பூரண நலத்துடன் வரும் 16ஆம் தேதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு விஜயகாந்த் தாயகம் திரும்ப உள்ளார் என என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது, அறிக்கையாக விஜயகாந்த் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments