Tamil Sanjikai

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரை திருப்பி அனுப்பவும், இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்திக்கொள்ளவும் பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக, இந்திய தூதர் அஜய் பிசாரியை திருப்பி அனுப்பவும், இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்திக்கொள்ளவும், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தூதரகரீதியிலான உறவுகளை குறைத்துக் கொள்ளவும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை டெல்லிக்கு அனுப்பப் போவதில்லை எனவும் அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாம்.

0 Comments

Write A Comment