Tamil Sanjikai

தொழில் அதிபர் விஜய் மல்லையாவை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

வங்கிகளில் பெற்ற சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திரும்பச் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறி தற்போது பிரிட்டனில் தஞ்சம் அடைந்து லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையாவின் செலுத்தாத கடனுக்காக அவரது சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக விஜய் மல்லையாவை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை, டெல்லியில் உள்ள பணமோசடிகளை தடுக்கும் சிறப்பு நீதிமன்றதை நாடியுள்ளது.

இந்த நிலையில் விஜய் மல்லையாவை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. மேலும் மேல்முறையீடு செய்யும் வரை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி என்று அறிவித்ததை நிறுத்தி வைக்குமாறு விஜய் மல்லையா தரப்பில் நீதிமன்றத்தில் கோரப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதன் மூலம் கடனுக்கு ஈடாக விஜய் மல்லையாவின் சொத்துகளை அரசு எளிதாக பறிமுதல் செய்ய முடியும்.

0 Comments

Write A Comment