Tamil Sanjikai

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்காக முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் 3 பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியில் முன்னாள் வீரர் அன்ஷூமான் கெய்க்வாட், முன்னாள் வீராங்கனை சாந்தா ரங்கசாமி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்காக வந்த விண்ணப்பத்தை பரிசீலித்த இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம், நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் டாம் மூடி, மேற்கிந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் பில் சிம்மன்ஸ், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மேலாளர் லால்சந்த் ராஜ்புத், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ராபின்சிங் மற்றும் ரவி சாஸ்திரி உள்ளிட்ட 6 பேரை தேர்வு செய்துள்ளது. இந்த 6 பேரை மட்டும் அழைத்து நேர்காணல் நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்போதைய பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் பெயரும் இந்த பதவிக்கு நேரடியாக பரிசீலிக்கப்படும்.

இவர்களில் ஒருவரை, கபில்தேவ் தலைமையிலான தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்த பின் நியமிக்கும்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளருக்கான நேர்காணலை நடத்துவதற்காக முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைமையகத்திற்கு வந்தார்.

தலைமை பயிற்சியாளருக்கான நேர்காணல் தொடங்கியது. வெஸ்ட் இண்டீசில் உள்ள ரவிசாஸ்திரியிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேர்காணல் நடத்துவார்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரை அறிவிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறது.

0 Comments

Write A Comment