Tamil Sanjikai

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முந்தைய நாளிலும் தீபாவளி அன்றும் மதுவிற்பனை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த ஆண்டு தீபாவளியன்று டாஸ்மாக் விற்பனையில் ஒரு புதிய சாதனையே ஏற்பட்டுள்ளது. சென்னையில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது மதுபோதையில் மோதலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அடிதடியில் ஈடுபட்டவர்களை ரோந்துப் பணியில் ஈடுபட்ட போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச்‌ சென்று விசாரணை நடத்தினர்.

தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு கடந்த 3 நாட்களில் 330 கோடிக்கு மதுபான விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையை விட 70 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 260 கோடிக்கு மதுபானம் விற்பனை நடைபெற்றது.

0 Comments

Write A Comment