Tamil Sanjikai

இந்த ஹால்ஸ்டாட் நகரத்து வீதிகளில் பெண்கள் நடமாடவில்லை,
பேய்கள் நடமாடுகின்றன! என்று கத்திவிட்டு காலியான கோப்பையை உடைத்தான் அவன்.
அப்போதுதான் அவனைக் கண்டேன்.
அவனது அருகில் ஒரு கித்தார் இருந்தது.
அவன் விரல்கள் உறைந்தும், கண்கள் அசூயையாகவும் இருந்தன.
மீண்டும் கத்தினான்... பெரிய பியானிஸ்ட்!
பெடலை மிதிப்பது போல ஒருநாள் உன்னுடைய யோனியில் உதைப்பானவன்.... அப்போது பியானோவிலிருந்து எழும் காற்றைப் போல உன்னுடைய உயிர் பிரியும்... என்னுடைய தந்திக் கருவி அதைக் கண்டுகொள்ளாது.....
இம்முறை அவனது கண்களில் நீர்.
எத்தனை கோப்பைகள் குடித்தேன் ஈவா?
நூலளவு வஸ்திரம் தரித்த யுவதி சொன்னாள்... ஒன்பது கோப்பை விஸ்கி! உடைத்துப் போட்ட பத்து காலி கோப்பைகள்... மொத்தம் நானுற்றைம்பது யூரோக்கள்!
அவனது கண்கள் அமைதியாக இருந்தன...
உன்னுடைய ஸ்தனங்கள் மெய்யா ஈவா?
அதற்கு ஈவா, இல்லை... அது உன்னுடைய காதலியைப் போலவே காற்றடைத்த பொய்கள்! என்றாள்.
காற்றை எதற்காக இந்தக் கடவுள் நாசியில் வைத்தான்? இந்த ஈவா வட்டுடையில் வைத்திருக்கிறாளே? இறைவனே?
அவன் அழுதான்.
இந்தப் பெண்டிரே இப்படித்தான் ஈவா! இன்னொரு கோப்பை விஸ்கி ஊற்று! என்றான் அவன்.
அவனது கித்தார் தன்னுடைய ஓலத்தை இழந்து உட்கார்ந்திருந்தது.
ஈவா அகன்று போனாள்.

0 Comments

Write A Comment