Tamil Sanjikai

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம், இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருந்தது.

இதற்கான 20 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை தொடங்கியது. இந்நிலையில் அதிகாலை 2.51 மணிக்கு ஏவப்படவிருந்த சந்திரயான் - 2 கவுண்ட்டவுன் திடீரென நிறுத்தப்பட்டது.

தொழில் நுட்ப கோளாறு காரணமாக கவுண்ட்டவுன் நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகுபலி ஏவுகணை என்றழைக்கப்படும் மார்க் -3 ஏவுகணை மூலம் சந்திரயான் - 2 ஏவப்படவிருந்தது. நிலவின் தென் பகுதியை ஆராயும் பணியை மேற்கொள்வதற்காக சந்திரயான் - 2 ஏவப்படவிருந்தது. ஒரு மாதத்துக்குப் பின்பே சந்திரயான் -2 ஏவப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

0 Comments

Write A Comment