Tamil Sanjikai

இடைத்தேர்தல் நடந்தால் அமமுக வெற்றி பெறும் -டிடிவி தினகரன் பேட்டி

அமமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளித்த 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த வழக்கை விசாரித்து வந்த 3-வது நீதிபதி சத்திய நாராயணன், கடந்த சில நாட்களுக்கு முன் தகுதி நீக்கம் செல்லும் என்று அறிவித்தார். அதையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தேர்தலை சந்திப்பதா? அல்லது மேல் முறையீடு செய்வதா? என்பது குறித்து டிடிவி தினகரனோடு தீவிர ஆலோசனை நடத்தினார்கள். இந்த நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிடிவி தினகரன், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவது இல்லை என்றும், தேர்தலை சந்திக்க இருப்பதாகவும், இடைத்தேர்தல்களில் டெபாசிட் வாங்க கூட அதிமுக போராட வேண்டி இருக்கும். இடைத்தேர்தல் நடந்தால் 20 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றிபெறும் என்றும் , இடைத்தேர்தலுக்கு தயாராகும் வகையில் நாங்கள் ஏற்கனவே பொறுப்பாளர்களை நியமித்துவிட்டோம் என்றும் தெரிவித்தார்.

0 Comments

Write A Comment