Tamil Sanjikai

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 72 ரன்களை அடித்தார். இதன் மூலம் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனின் சாதனையை விராட் கோலி முறியடித்துளார் இத்தொடரில், கோலி அடித்துள்ள நான்காவது அரைசதமாகும்.

முன்னதாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக அவர் முறையே 67,77, 82 ரன்களை அடித்தார். இதையடுத்து உலகக்கோப்பைப் போட்டிகளில், தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் அரைசதம் அடித்த இந்திய கேப்டன் என்ற புதிய சாதனையை விராட் கோலி படைந்துள்ளார்.

ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், மூன்று போட்டிகளில் தொடர்ந்து மூன்று அரை சதங்களை அடித்துள்ளதே, இந்திய அணி அளவில் இதுவரை சாதனையாக இருந்து வந்தது. இச்சாதனையையும் கோலி தற்போது முறியடித்துள்ளார்.

0 Comments

Write A Comment