Tamil Sanjikai

திருச்சி விமான நிலையத்தில் ரூ.10.56 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த மலிந்தோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, மதுரையைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூபாய் 2.16 லட்சம் மதிப்புள்ள 432 சிகரெட் பாக்கெட்டுகளும், ரூபாய் 9.55 லட்சம் மதிப்புள்ள 258 கிராம் எடையுள்ள 19 ஜோடி தங்க காதணிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

0 Comments

Write A Comment