Tamil Sanjikai

சென்னை தண்டையார்பேட்டையில் முன்விரோதம் காரணமாக தள்ளுவண்டிக் கடைக்காரர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தண்டையார்பேட்டை காவல்நிலையம் எதிரே தள்ளுவண்டியில் சிற்றுண்டி உணவகம் நடத்தி வந்தவர் ரவி. சில தினங்களுக்கு முன் இவரது உணவகத்தில் உணவருந்திய ரவுடி, ரேடியோ விஜி என்பவன், பணம் தராமல் தகராறு செய்துள்ளான். அப்போது அங்கு வந்த போலீசார் விஜியை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் ரவியை அவரது வீட்டருகே காலையில் வழிமறித்த மர்ம கும்பல் ஓன்று ரவியை, அரிவாளால் வெட்டிக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் போலீசார், ஜாமீனில் வெளிவந்திருக்கும் ரேடியோ விஜிதான் இந்தக் கொலையை அரங்கேற்றியிருக்க வேண்டும் என தெரிவித்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ளவர்களைத் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

0 Comments

Write A Comment