மாணவர்கள், மக்கள் ஆகியோரின் நலன் கருதி அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனத் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் 9 கோரிக்கைகளை வலியுறுத்திப் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அவர்களை அழைத்துப் பேசுவதற்கான அக்கறை அரசிடம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் திமுக ஆட்சி அமைந்த பிறகு உரிய முறையில் பரிசீலித்து நிறைவேற்றப்படும் என்றும், அ.தி.மு.க அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
0 Comments