Tamil Sanjikai

லண்டனில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் நிரவ் மோடியை 29ம் தேதி வரை காவலில் வைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் மோசடி செய்து விட்டு தலைமறைவான தொழிலதிபர் நிரவ் மோடி, பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார். ஆனால் இந்தியாவின் வற்புறுத்தலின் காரணமாக லண்டனில் கடந்த புதன் கிழமையன்று ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நீரவ் மோடியை வருகிற 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட நிரவ் மோடி லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

0 Comments

Write A Comment